Samy's
ஆசை
மனிதம் - சிறுகதை
நாங்கள் கொடுத்த report -ஐ டாக்டர் படித்து கொண்டிருந்தார். அந்த அறை முற்றிலும் குளிரூட்டபட்டிருந்தது. வெள்ளை அறை. நடு நிசி இரவின் அமைதி. அறையின் ஒரு ஓரத்தில் மருந்தும், injection-னும் வைக்க fridge இருந்தது. அருகே ஒரு பெரிய மீன் தொட்டி. அதில் ஒரே ஒரு நீளமான மீன். கடந்த ஒரு வருடமாக இங்கு வருகிறேன். எப்பொதும் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக எதை நோக்கியோ விடாமல் நீந்துகிறது. தன் உணவைவிட கண்டிப்பாக வேறு ஒன்றை தேடித் தான் நீந்திக் கொண்டிருக்கிறது. இஞ்சினியரிங் படித்து computer முன்னால் வேலை செய்யும் ஆட்டு மந்தையில் இருந்து விலகி, திரைக்கடலில் என் லட்சியத்தை நோக்கி நீந்தும் என்னை போல.
டாக்டரின் டேபிளில் சின்ன சாய் பாபா சிலை. என்னை அருளிக் கொண்டிருப்பது போல் அமர்ந்திருந்தார். அம்மாவிற்கு எதுவும் இருக்க கூடாதென நானும், தன்னால் மகனுக்கு எந்த கவலையும் வர கூடாததென அம்மாவும் வேண்டிக் கொண்டிருந்தோம். அப்பாவின் இறப்பிற்கு பிறகு எனக்கு அம்மா தான் ஓரே ஆறுதல். அம்மாவிற்கு நான்.
டாக்டர் ஆரம்பித்தார்.
"முன்னாடி சொன்னது தான். cirrhosis. முன்னாடிக்கு இப்ப Liver ரொம்ப damage ஆகிருக்கு. Infection-னும் அதிகமாகிருக்கு. மாத்திரைல அந்த damage recover ஆகல.உங்க வயசு என்னமா?" என்றவாரே report-ல் வயசை தேடினார்.
அதற்குள், "51-ங்க" என்றாள் அம்மா
"51 is not bad. ஒரு surgery பண்ண வேண்டியது இருக்கும். அது பண்டிட்டு, கொஞ்சம் diet maintain பண்ணி careful-ஆ இருந்தா கண்டிப்பா liver recover ஆகும்."
"என்ன surgery சார்?" என்றேன்
" 'Auxiliary partial Orthotopic Liver Transplant' னு சொல்வாங்க. உங்க அம்மாவோட liver-ல damaged part மட்டும் remove பண்ணிட்டு, donor-ஓட liver-ல கொஞ்சம் மட்டும் எடுத்து ஒட்ட வைக்கனும். Her Liver will adapt it and regain its function."
"எவ்வளவு செலவாகும்? "
"25ல இருந்து 30 லட்சம் வர ஆகலாம்." இதை கேட்டவுடன் அம்மா ஓவென அழ ஆரம்பித்தாள். என் தொண்டையும் அடைத்து கொண்டது.
"கவலபடாதிங்கமா..எல்லாம் சரியாகிரும்.", என்றார் டாக்டர்.
அழுது கொண்டே அம்மா, "சார், ஆப்ரேசன்லாம் வேணாம். வயித்த வலிக்கு மட்டும் மாத்திரை தாங்க போதும். என் பையன் பாவம்" என்றாள்
டாக்டர் தர்மசங்கடத்தில் நெளிந்தார். சுதாரித்து கொண்டு, "அம்மா, நீ வெளிய இரு. நான் பேசிட்டு வரேன். மாமாக்கு கால் பண்ணி கூப்பிடு" என்று அம்மாவை வெளியே அனுப்பினேன்.
"டாக்டர், surgery இல்லாம முடியாதா?"
"அதன் நானும் try பண்ணோன். But liver regain ஆகலயே. இப்படியே விட்டா கொஞ்ச நாள்ல infection liver full-லா பரவிரும். அப்பறம் surgery பண்ணா கூட சரி பண்ண முடியாது.early stageல காப்பாத்துன தான் நல்லது. இப்ப இந்த tablet போடுங்க. 2days-ல admission போட்டுருங்க." மருந்து சீட்டு வாங்கி கொண்டு வெளியே வந்தேன்.
வெளியே அம்மா அழுது கொண்டு இருந்தாள்.
"அழாதமா. நான் இருக்கேன்ல. மாமா வராங்களா?"
"அவன் சாப்பாடு எடுத்துட்டு வீட்டுக்கே வரானாம்" என்று கண்களை துடைத்து கொண்டே சொன்னாள்.
வீட்டிற்கு வந்தோம். இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. எவ்வளவு சமாதானம் சொல்லியும் அம்மாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை.இந்த operation பண்ணுவதால், உடல் வலி ஒரு புறம் இருந்தாலும், பணம் எப்படி புரட்டுவது. அது தான் எங்கள் இருவர் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது. என் திரை ஆர்வத்தை ஊக்குவித்த ஓரே ஆன்மா அம்மா மட்டும் தான். ஆனால், டாக்டர் ரூமில் இருக்கும் மீன் போல நோக்கம் சரியாக இருந்தாலும் திசை தெரியாமல், தொடக்க புள்ளி இல்லாமல், அதற்கு வழியும் இல்லாமல் அலையும் உயிர் நான். கடவுள் கூட ஏழை, பணக்காரன் வித்தியாசம் தெரிந்து வரிசை தகுதி வைத்து ஆசீர்வதிக்கிறார். ஆனால் நோயிக்கு தான் தகுதி தெரியவில்லை. அம்மா மடியில் படுத்து யோசித்து கொண்டே தூங்கிவிட்டேன்.
மாமா வந்து சத்தம் கொடுத்தார். இரண்டு tiffin carrier கொண்டு வந்தார்.
"என்னப்பா இதுக்கே இப்படி படுத்துட்ட. வாழ்க்கைல இன்னும் நிறைய இருக்கு. முதல்ல சாப்பிடு. மத்தத எல்லாம் அப்பறம் பாக்கலாம். இந்தா இது உனக்கு. அக்கா இது உனக்கு உப்பு இல்லாம." என ஆளுக்கு ஒரு carrier கொடுத்தார்.
முகம் கழுவி, லுங்கியை மாற்றி சாப்பாடு தட்டின் முன் அமர்ந்தேன். சாம்பாரும் பொரியலும் இருந்தது. சாப்பிட்டு கொண்டே, "மாமா, எங்கட்ட இருக்கிற ஓரே சொத்து இந்த வீடு தான். இத வித்தரலாம். ஒரு 10 ,12 லட்சம் எடுத்தரலாம். மீதி பணம் எப்பிடியாது புரட்டனும்."
"வீட்ட ஏன் விக்கனும். வேற ஏதாவது பண்ண முடியுதானு பாக்கலாம் " என்றார் மாமா.
"வேற என்ன இருக்கு எங்கிட்ட" என்று சொல்லும் போதே அழுகை வந்தது. அம்மாவும் அழுதாள்.
"சதீசு, தைரியமா இரு. அம்மாக்கு நீ தான் தைரியம் சொல்லனும். நீயே அழலாமா. " என்றார் மாமா.
"இந்த வீட்ட வித்து, இவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிரலாம்ப்பா. எனக்கு ஆப்ரேசன்லாம் வேணாம். நான் நிம்மதியா போய்ருவேன்" என்றாள் அம்மா.
காசும் இல்லாமல் வேலையும் இல்லாமல் கையாலாகாத தன்மையை நினைத்து மனம் வலித்தது. அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு தினேஷ் வந்தான். என் உற்ற நண்பன்.
"மாப்ள. எப்படி யாசும் 2,3 லட்சம் புரட்டி குடுக்குறன்."
அதற்குள் மாமா "தம்பி இந்த facebook whatsappல லாம் msg வருதே. உடம்பு சரி இல்ல காசு குடுங்கனு. அது மாதிரி netல போட்டு விடுங்க."
சரியேன தினேஷ் அவனுக்கு தெரிந்த குருப் எல்லாவற்றிலும் msgஐ அனுப்பினான். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. கொஞ்ச நேரத்தில் தினேஷோடு பணம் புரட்ட கிளம்பினேன். பணம் நிலத்தடி நீர் போல எந்த இடத்தில் எவ்வளவு இருக்கும் என தெரியாது. யாரிடம் எவ்வளவு கேட்டாலும் 'அவ்வளோ காசா..' என வாயை பொளந்தார்கள். அன்று இரவுக்குள் 2லட்சம் திரட்டினோம்.
அடுத்த நாள் மாமா அத்தையோடு வந்தார். மஞ்ச பையில் இருந்து 15 லட்சத்தை எடுத்து வைத்து, "நம்ம வித்யா கல்யானத்துக்கு சேத்து வச்சது. இத நீயே வச்சுக்கோ. அம்மாக்கு சரியாகி கொஞ்ச நாள் அப்பறம் அவள உனக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று அத்தையை பார்த்தார்.
அத்தை ஆரம்பித்தார். "அப்பிடியே சினிமாலாம் விட்டுட்டு, நீ படிச்ச படிப்புக்கு வேலை தேடி settle ஆகிரு."
என் வீட்டை தவிர விற்பதற்கு என்னிடம் இன்னொன்று இருப்பது புரிந்தது. ஆனால் அதன் விலை தான் அதிகம். என் கனவு.
" எனக்கு கொஞ்சம் time வேணும்" என்று வெளியே கிளம்பினேன்.
மண்டைகுள் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது. தலை கணத்தது. ஒரு டீ கடையில் தம்மை பற்ற வைத்து டீ சொன்னேன். திடீரென்று ஒரே சத்தம். ஒரு பெரியவர் மீது ஒரு புல்லட் உரசிய படி நின்றது. நிலை தடுமாறி பெரியவர் கீழே விழுந்தார். புல்லடோடு ஓட்டுனரும் விழுந்தார். அங்கு நின்ற அனைவரும் அவர்களுக்கு உதவ ஓடினோம். கீழே விழுந்த புல்லட்டை நானும் ஓட்டுனரும் தூக்கி நிறுத்தினோம். அதற்குள் அந்த பெரியவர் , "தேவடியா பயா. மொதுவா வரமாட்டியா.. " என்று வார்த்தையை விட்டார். கோபம் வந்த ஓட்டுனர் அவரிடம் சண்டை போட சொல்ல, நான் வண்டியை stand போட்டேன்.
அப்போது petrol tank மேலே உள்ள பையில் ஒரு கவர். கவரின் பாதி வெளியே வந்திருந்தது. உள்ளே அவ்வளவும் பணம். 2000ருபாய் கட்டுகள். எனக்கு அதில் என் அம்மா மட்டும் தான் தெரிந்தாள். அங்குள்ளவர்கள் அனைவரும் சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அந்த விநாடியில் எனக்கு வேறு எதும் தோன்றவில்லை. மனிதன் மிகவும் கொடுரமானவன். அவன் மனம் மிகவும் சுயநலமானது. இறுதியில் அவனும் மிருகமே. அந்த கவரை எடுத்து சட்டைக்குள் போட்டு இடத்தைவிட்டு நகர்ந்தேன்.
குற்றவுணர்வு வளர்வதற்குள் எடுத்த பணத்தை மருத்துவமனையில் கட்டிவிட வேண்டும் என ஓடினேன். மருத்துவமனையில் பணத்தை கட்டி, டாக்டரை பார்க்க வேண்டும் என கேட்டேன்.
ரூம் உள்ளே சென்று டாக்டரிடம் காசை குறைக்க கெஞ்சினேன். தன் feesஐ தான் தன்னால் குறைக்க முடியும் என்றும். Hospital feesஐ குறைக்க management தான் முடிவு செய்ய வேண்டுமென சொன்னார். பேசி முடித்து கிளம்பும் போது அந்த மீன் தொட்டியை பார்த்தேன். மீன் இல்லை.
"டாக்டர் அந்த மீன்....?"
"அது இறந்துருச்சுங்க.. "
The one with absurdity - P1
Performance - சிறுகதை
Squid Game
சுரேஷ் அண்ணன்
மாலை பொழுதின் மயக்கத்தில்
ஜன்னல் - சிறுகதை
அன்புள்ள தளபதிக்கு
அன்புள்ள தளபதிக்கு,
உன் நெஞ்சில் குடி இருக்கும் அன்பான ரசிகர்கள்ல நானும் ஒருத்தன். சாதாரன அகா துகா ரசிகனெல்லாம் இல்ல. உன் first look-ஐ DP ஆ வைக்கிற, wallpaper ஆ வைக்கிற..உன் பாட்ட ringtone ஆ வைக்கிற..உன் trailer-ஐ 100 தடவ பார்த்து, 10frames-ஆ screenshot எடுத்து, 1000 பேருக்கு share பண்ணி views ஏத்த நினைக்கிற...உன் படம் வரும் போது, தெரிந்த நண்பனின், அதுவர contact-ஏ இல்லாத ரசிகர் மன்ற சொந்தகாரனுக்கு போன் போட்டு ,சண்டை போட்டு, அப்பறம் கெஞ்சி கூத்தாடி, டிக்கெட் வாங்கி, theater உள்ள போகும் போது கூட்டத்தோட அஜித்த கெட்ட வார்த்தைல திட்டி, கடைசியா உன் பேர் screen-ல வரும் போது, சீட்ல ஏறி கத்துற ரசிகர்கள்ல ஒருத்தன்.
'இதெல்லாம் ஒரு matter-ஆ ? '-னு மிக எளிமையாக இதை கடந்து போகலாம். ஆனால் ஊருக்கு 1000 பேர் இருக்கும் மன்றத்தால் மட்டும், உன் படம் 100 கோடி கொடுப்பதில்லை. என்னை போன்ற banner-ல் முகம் தெரியாத லட்ச கணக்கான உன் 'நண்பர்கள்' தான் உன் முதுகொலும்பு.
என்னடா 'நீ நான் '-னு மரியாத இல்லாம பேசுறேன்னு நினைக்காத. வீட்டுல அப்பா அம்மா ,அண்ண அக்கா மாதிரி மனசுக்கு நெருக்கமானவங்கலாம் அப்படி தான சொல்வாங்க. So cool bro.
சரி. என்னைகாச்சும் நீ வேல செய்யாத ஒன்னு நல்லா வரனும்னு,ஜெய்ச்சிரனும்னு கடவுள்ட்ட வேண்டிருக்கியா. நான் வேண்டிருக்கேன். உன் படம் வர, முந்தின நாள், ராத்திரி fulla உக்காந்து வேண்டிருக்கேன். ஏன்னா அப்பதான் அடுத்த நாள் நான் office போக முடியும். நிம்மதியா வேல பாக்க முடியும். ஏன்னா, நீ தான் நான். ஆமா உன்ன தான் நான் எங்க office ல represent பண்ணறேன். என்னைய மாதிரி நிறைய வீட்லயும், office-லயும்,பொது இடத்திலயும் உன்ன represent பண்றவன் இருப்பான்.நாங்களாம் படம் நல்லா இருந்துச்சுனா, 'ஓத்தா செம மாஸ்'னு Fb ல கொத்தா status போட்டு, அப்பறம் சொந்த காச போட்டு teammates, friends, family னு எல்லாரையும் படம் பாக்க வச்சுருவோம். அதே படம் நல்லா இல்லனா 10steps back. என்ன என்ன அசிங்கமா கேள்வி கேப்பான்னு முன்னாடியே யோசிச்சு, அதுக்கு counter யோசிச்சு, meme யோசிச்சு, கொஞ்ச நாள் சத்தமே இல்லாம office போய்ட்டு வருவோம். ஏன்னா 10 நாளுக்கு நம்மல அத சொல்லியே ஓட்டுவாங்க. உனக்கு தெரியுமா, புலி வந்த அப்போ அடுத்த நாள் office க்கு leave. சுறா வந்த அப்பலாம் ரொம்ப மோசம். ஒரு கல்யாண வீட்ல ஒரு பெருசு, " தம்பி, நீ விஜய் fanஆ" னு கேக்க , நான் "ஆமா" னு சொல்ல சுத்தி இருந்தவன் எல்லாம் சிரிச்சுட்டான். Puppy shames of India. இதேல்லாம் தாண்டி என்னைக்கும் நீ தான் என் தளபதி.
"ஏன்டா அவ்ளோ கஷ்டபட்டு என்னைய follow பண்ற"னு கேக்கிறியா. சத்தியமா தெரியல. என் childhood days யோசிச்சு பாக்குறன். நீ தான் என் all time favorite hero. அப்போ ஆரெம்கேவி விளம்பரத்துல வர மாதிரி வெள்ளயா இருக்கிற hero லாம் என் மனசுல ஒட்டவே இல்ல. உன்ன பாத்தா தான், எங்க தெருல நல்ல கிரிக்கெட் ஆடுர நாகராஜ் அண்ண மாதிரி, எங்க school people leader தினேஷ் அண்ண மாதிரி, பஸ்ல எங்க area-கு சண்ட போட்ட குமார் அண்ண மாதிரி எங்கள் ஒருத்தனா நீ இருந்த. அதான் உன்ன புடிக்க காரணமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன். உன்ன மாதிரி முடி வெட்டி, உன்ன மாதிரி dress வாங்கி, நீ போட்ட மாதிரியே கழுத்துகுள்ள dollar இல்லாத 5ரூபா chain போட்டுகிட்டு,உன் பாட்டு புக் 50p வாங்கி மனபாடம் பண்ணிட்டு சுத்தினதுலாம் ஞாபகம் வருது.
சரி பழசெல்லாம் இப்ப எதுக்கு பேசுகிட்டு. சர்கார் படம் பாத்தேன். அரசியலுக்கு வர போல?. Recent ஆ வந்த நிறைய படத்துல அத sense பண்ண முடிஞ்சுது. ஆனா இவ்ளோ சீக்கிரம் வருவ,அதுக்குனு ஒரு படம் எடுப்பனு நினைகல. நமக்கு எதுக்கு தலைவா அரசியல்லாம்? Jolly-ஆ படம் நடிச்சோமா, சமூகத்துக்கு 4 நல்ல கருத்து சொன்னோமானு இருக்கலாமே. Pls bro வேணாம். அது என்ன சினிமால பெரிய ஆளா ஆகிட்டா, direct ஆ CM ஆக ஆசபடுறீங்க. உடனே 'எங்களுக்கு rights இல்லையா'னு கேக்காத. இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி உரிமை இருக்கு. ஆனா உனக்கு மாதிரி எனக்கும் இருக்கு. என் பக்கத்து வீட்டுகாரனுக்கும் இருக்கு. ஆனா நாங்க election-ல நின்னா உன்ன மாதிரி ஓட்டு வாங்குவோமா? ஏன்னா சினிமா புகழ். Exampleக்கு. ஒருத்தன் நல்ல கொள்கை, கோட்பாடு, திட்டத்தோட வரான். அவன் மக்கள்ட்ட போய் சேர்ந்து, திட்டத்த புரிய வச்சு, அத மக்கள் நம்பி convince ஆகி, ஓட்டு வாங்கி ஒரு தொகுதில win பண்ண 20வருசம் ஆகும். ஆனா சினிமால இருந்து வந்தா, இந்த steps லாம் skip பண்ணிட்டு direct-ஆ CM ஆக வரீங்க. அதுனால என்ன problem-னு கேக்கிரியா? டெங்கு மாதிரி நோய் பரவ காரணமா இருக்குறது சுகாதாரதுறை-னு கூட தெரியாம வரீங்க. இலவசம் அரசாங்கம் ஏன் குடுக்குதுனு சின்ன சமூக புரிதல் கூட இல்லாம வரீங்க. முதல்ல அது இலவசம் இல்ல. விலையில்லா பொருள். நீ bodyguard-அ காவலன்னு படம் எடுத்து 18 % வரி சலுகை வாங்குனல. அது மாதிரி இல்லாத மக்கள் 100% சலுகைல பொருள் வாங்குராங்க. இந்த புரிதல் இல்லாம தான் CMக்கு ஆசபடுரீங்க. ஒரு வேல அந்த வரி சலுகை இப்ப இருக்குனா, 'சர்கார்' படம் 'அரசியல்'-னு வந்துருக்கும். அரசியல் வேணாம் தலைவா.இனிமே 'அரசியல்' மாதிரி எந்த படமும் வேணாம்.
இப்பவே பாரு. நீ சென்னது நம்பி நிறைய பேர் mixy grinder எரிக்குரா மாதிரி வீடியோ போடுறான். யோசிச்சு பாரு, நீ ஆட்சி அமைச்சா, இந்த group-ல இருந்து ஒருத்தன் தான் நிதி அமைச்சரா வருவான். எல்லா group-லயும் ஒரு bijili ramesh இருக்கான் போல. Already தமிழ்நாடு, லாரி tyre-க்கு நடுல மாட்டுன எலி மாதிரி இருக்கு. இன்னும் நசுக்காத.உடனே 'MGR மாதிரி ஆட்சி அமைப்பேன்'னு செல்லாத. அவர் ஆட்சி ஒன்னும் பொற்கால ஆட்சி இல்ல. Security-லாம் கல்வி தந்தை ஆனதும், குப்பம், கடற்கரை ஆன வரலாறுலாம் படிச்சு பாரு.
இதுக்கு அப்புறமும் " இதான் நம்ம சர்கார்"னு சொன்னா,சாரி ப்ரோ.ஆனா, இப்பவும் உன் படம் வந்த FDFS தான். வேற படத்துல உன் reference வந்தா, எல்லோரும் திரும்பி பாக்குற மாதிரி விசில் அடிப்பேன். உன் pic தான் dp wallpaper. உன் பாட்டு music channel ல வந்தா பாப்பேன், வீட்டையே பாக்கவைப்பேன். சினிமால நீ தான் என் தளபதி. ஆனா ஓட்டு உனக்கு இல்ல. தலைவன் வடிவேலு dialogue ல சொன்னா புரியும்.
"பழக்க வழக்கம்லா படத்தொட இருக்கனும்,
CM ஆகுறேன் வேலைலாம் வச்சிக கூடாது. தெரியுதா? "
இப்படிக்கு,
உன் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகன்.
சிவப்பு - சிறுகதை
அடர்த்தியாக மழை பெய்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்த அந்த இரவில், கரு நிற முகத்தில் மஞ்சள் நிற சாந்து பொட்டு போல தூரத்தில் ஓர் பேருந்து நிறுத்ததின் மஞ்சள் வெளிச்சம். உற்று பார்க்கும் போது அங்கு ஓர் பெண் தனியாக நிற்பது தெரிந்தது. விரைவாக நடக்க ஆரம்பித்தேன். மூச்சு வாங்கியது. அருகே செல்ல செல்ல அவள் உருவம் மட்டும் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. பேருந்து நிறுத்த வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தேன்.சுற்றி இருக்கும் இருளும், உடலை கவ்வும் குளிரும் என்னை என்னவோ செய்தது. நான் வந்ததை அவள் கண்டு கொள்ளவில்லை. திரும்பி நின்று யாரையோ தேடிக் கொண்டிருந்தாள்.
தங்க நிற ஜரிகை வைத்த சிவப்பு நிற சேலையும், heels இல்லாத செருப்பும் அணிந்திருந்தாள். மஞ்சள் வெளிச்சத்தில் சிவப்பு நிறம் அவளின் வடிவத்தை நன்றாக எடுத்து காட்டியது. Tyre advertisement -ல் வரும் கார் போல அவள் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி சென்றது என் கண்கள். அவளின் முதுகில் பாதியை காட்டும் blouse அணிந்து, அதன் மேலே வட்ட கொண்டையில் கனகாம்பரம் சுற்றி வைத்து தன்னை அழகுபடுத்தி இருந்தாள்.
அவளின் முகத்தை பார்க்க வேண்டும் என எத்தனித்து, குரலை சரி செய்வது போல சத்தமிட்டு என் இருப்பை பதிவு செய்தேன். அவள் திரும்பவில்லை. மெதுவாக என் செருப்பை தரையில் தேய்த்து அவள் அருகில் சென்றேன். அப்போதும் திரும்பவில்லை. cake நடுவில் தெரியும் cream போல மாநிறத்தில் அவளின் இடுப்பு மட்டும் கண்ணுக்கு தெரிந்தது. அவளை தொட்டு அழைக்க மனம் ஏங்கியது. இன்னும் அருகில் சென்றேன். என் மூச்சு காற்று அவள் கழுத்தில் விழுந்திருக்கும். இருந்தும் அவள் அசைவில்லாமல் நின்றிருந்தாள். அவள் பூவில் இருந்து வாசனை இல்லை. எந்த எதிர்ப்பும் காட்டாததால் என் கை அவள் இடுப்பிற்கு சென்றது. குளிரோ பயமோ கை நடுங்கியது. Slow motion -ல் என் கை அருகில் அவள் செல்ல , அவள் உடம்பின் சூட்டை நான் உணர, என் நெஞ்சு சூவற்றில் யாரோ paint brush-ஆல் படம் வரைவது போல உணர்ச்சி மேலிட, மூளையில் சூடான இரத்தம் பாய்ச்சுவது போல் இருந்தது.
அவளை தொடும் அந்த நிமிடத்திற்குள், என்னை யாரோ காலில் தட்டுவது போல தெரிந்தது. திரும்பி பார்ப்பதற்க்குள் அங்குள்ள விளக்கு அணைந்தது. இருள் சூழ்ந்தது. அவள் மறைந்தாள். சுற்றி மழை இல்லை. படம் ஆரம்பித்த பின், தியேட்டர் கதவை திறக்கும் போது fade in ஆகும் சத்தம் போல், மெதுவாக நிஜ உலகின் இரைச்சல் என் காதை நிறைத்தது. கனவில் இருந்து வெளி வந்ததை உணர்ந்தேன். காலுக்கு அருகில்,"சாரி தாத்தா... தெரியாம கால மிதிச்சுட்டேன்" என்று பள்ளி கிளம்பும் அவசரத்தில், uniform -ஐ அணிந்து கொண்டிருந்தான் பேரன். கனவொன்னும் சொர்க்கவாசல் அடைத்தது.
'பரவால டா.. ' என்பது மெல்ல சிரித்து தலையை ஆட்டி, படுக்கையில் இருந்து எழ முயன்றேன். முடியவில்லை. முட்டி வலித்தது.
"செல்லம், தாத்தாக்கு கை குடு பாக்கலாம்.. ". அவன் என் கையை பிடித்து, அவன் தோளில் வைத்து "சங்கிலி கருப்பேஏஏஏஏஏஏஏ... " என்று கத்தியவாரே இழுந்தான். நானும் இன்னொரு கையை தரையில் ஊன்றி எழுந்தேன்.
எழுந்து லுங்கியை சரி செய்தவாரே, "யாருடா சங்கிலி கருப்பு? "
"மெர்சல் படம் தாத்தா..உனக்கு தெரியாது. "
"bro, எனக்கு தெரியும் bro.. 'நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று' தான..." என சிரித்து கொண்டே, "நான் பத்த வச்ச நெருப்பு நீங்க தான் செல்ல குட்டிகளா" என்று கன்னத்தை கிள்ளி முத்தம் கொஞ்ச..
"எனக்கு time ஆச்சு நான் கிளம்ப போறேன்.. " என்று பள்ளி பையை எடுத்து வைக்க ஓடினான்.
காலை கடனை முடிக்க பாத்ரூமிற்கு சென்றேன். ஆனால் ஒன்றில் மகன் குளித்து கொண்டிருந்தான். இன்னொன்றில் மருமகள் இருந்தாள். வார நாட்களின் காலை வேளையை புரிந்து கொண்டு வெளியே வந்து அமர்ந்தேன். மனைவி கிட்சனில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். ஓய்வு பெற்ற பின் என் காலை, 9 மணிக்கு பின் தான் தொடங்கும். வெளியே அமர்ந்து நாளிதழை படிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் மகனும் மருமகளும் கிளம்பி வந்தார்கள். எல்லோரும் 'bye' காண்பித்து கிளம்பினார்கள். வீடு அமைதி ஆனது. மனைவி மட்டும் கிட்சனில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
நான் வருவதை பார்த்து "காப்பி வேணுமா? " என்றாள்.
"குளிச்சுட்டு வரறேன்" என்று அடக்கி வைத்த காலை கடனை முடிக்க சென்றேன். குளித்து முடித்து சாமி கும்பிட்டு திருநீறு அணிந்து ஹாலில் tv முன் அமர்ந்தேன்.மனைவி சூடாக இட்லியும் சட்னியும் தந்தாள். ஜெயா டிவியில் தேனருவி ஓடிக்கொண்டிருந்தது. பின் சூடாக காபி வந்தது. தேனருவி bore அடிக்க TV channel -ஐ மாற்றிக் கொண்டே வந்தேன். ஒரு கேபிள் சேனலில் பிரசாந்தும் கிரணும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
"...நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்..சட்டென்று நான் விழுந்தேன்....." என பாடிக் கொண்டே கிரண் கடலில் விழுகிறாள்.
பாட்டும் காப்பிம் மூளையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. எழுந்து கிட்சனுக்கு சென்றேன். அங்கே தரையில் அமர்நது மனைவி இட்லி மாவு அரைக்க அரிசி அளந்து கொண்டிருந்தாள். பாதி சேலையை இடுப்பில் சொருகி இருந்தாள். இன்றும் அவள் மீது வியர்வையும் கொத்தமல்லியும் கலந்த வாசம். அவள் அருகில் அமர்ந்து, "என்ன பண்ற?"
"மாவு அரைக்கனும்.. அதான் அரிசி ஊற வைக்க போறேன்.. என்ன வேணும்.. பசிக்குதா...? "
"ஆமாடி பசிகுது.. "
"நான் வேணா தோச சுடவா..?" என்று எழுந்தாள்.
"வயித்து பசி இல்ல.. " என்று கை பிடித்து மடியில் படுக்க வைத்தேன்
கையை உதறிவிட்டு, "பசிக்கும்யா நல்ல பசிக்கும்... அர மண்டை ஆன அப்பறமச்சும் அடங்குதான்னு பாரு... போய் TV பாருங்க. போங்க" என்று சிரித்து கொண்டே எழுந்தாள்.
"உன்ன தொட்டு 5 வருசம் ஆச்சு.. ஓரே ஒரு வாட்டி டி... Pls... " என்று எழுந்து அவள் அருகில் சென்றேன்.
"விளாடாதீங்க... யாராச்சும் வந்தா... சிச்சீ.. இந்த வயசுல... வயசுக்கு ஏத்த மாதிரி அறிவும் இருக்கனும்.. வெவஸ்த்த இல்லாம.. போங்க அங்கிட்டு.. சும்மா கேக்குறீங்கனு பாத்தா... " என்று கோபித்து கொண்டு என்னை துரத்தினாள்.
எனக்கு வெட்கமாகவும் கோபமாகவும் இருந்தது. சிறு வயதில் பல முறை நான் கேட்டு வேண்டாம் என்றிருக்கிறாள். அப்போது வந்திடாத கோபம் கலந்த இந்த உணர்வு எனக்கு புதிதாக இருந்தது. கிட்சனில் இருந்து வெளியே வந்து அமர்தேன். டிவி பார்க்க பிடிக்கவில்லை. போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தேன். Whatsapp முழுவதும் msg-களால் நிரம்பியிருந்தது. குடும்ப குருப், வாக்கின் குருப், என்று பல குருப்களில் add பண்ணி இருந்தார்கள். ஏதோ ஒரு குருப்பில் ஓர் video இருந்தது. கிளிக் செய்தவுடன் YouTube open ஆனது. ஏதோ ஓர் படத்தின் trailer ஓடியது. நாயகன் இங்கும் அங்கும் தாவிக் கொண்டிருந்தார். வீடியோ பார்த்து முடித்தவுடன் 'suggestions ' என பல வீடியோகள் வந்தது. கீழே ஒரு வீடியோ "18 வயது பெண் செய்யும் காரியத்தை பாருங்கள் " என்று ஒரு விதமான போட்டோ போஸ் இருந்தது.ஆர்வம் அதிகமானது. கை நடுயவாரே கிளிக் செய்தேன். ஆனால் உப்பு சப்பு இல்லாமல் அதில் ஒரு பெண் ஏதோ ஹிந்தி பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் ஆனது போல் இருந்தது. ஆனால் கீழே suggestions-ல் எண்ணற்ற 'அந்த' வீடியோக்கள் கண்தில்பட்டது.
அதில் ஒரு பெண் சிவப்பு சேலை அணிந்து திரும்பி நிற்பது போல் போட்டோவுடன் "தமிழ் பெண்ணின் அந்தரங்க selfie வீடியோ" என்றிருந்தது. கனவில் பார்த்த அதே உருவம். கிளிக் செய்தேன்.
அந்த பெண் முகத்தை காட்டாமல் திரும்பி நின்றிருந்தாள். குனிந்து எதையோ எடுத்து மேலே பரனில் வைத்து கொண்டிருந்தாள். கனவில் பார்த்த அழகான அதே நெளிவு சுளிவுகள். ஆனால் தலையில் பூ இல்லை.முன்னால் fan இருக்கும் போல. காற்றில் அவள் தலை முடி அசைந்தது. அவள் சேலையும் சேர்ந்து அசைந்தது. அவளது சேலை முந்தானை விலகி பறக்க முயல, அதை ஒற்றை விரலில் புடித்து கொண்டிருந்தாள். அலையலையாய் சேலையும், அதில் நுரையாய் முடியும் நிறைந்து அவள் கடலில் என் மனம் மிதந்து கொண்டிருந்தது. என்ன நினைத்தாளோ, விரலில் பிடித்த முந்தானையை விட்டுவிட்டு, கடலின் மேல் நிலவாய் அவள் முகம் காட்டி, கைகளால் பாதியை மறைத்து, வெட்கத்தோடு மீண்டும் திரும்பி கொண்டாள். பின் தன் நெஞ்சுக்குள் கையை வைத்து அடுத்த கட்டத்திற்கு சென்றாள். திடீரென்று வீடியோ சுற்ற ஆரம்பித்தது. வீடியோ load ஆகவில்லை. மனம் படபடத்தது. ஜியோவை திட்டியது. ஜியோகாரனை வெறுத்தது, அடித்து கொல்ல கூட தோன்றியது.
அந்த சில நொடிக்குள் "குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.. குறை ஒன்றும் இல்லை கண்ணா..." ரிங்டோன் அடித்து, போனின் திரையில் 'Sandhiya calling' என்று வந்தது. மகள் அழைக்கிறாள். முகம் வியர்த்து, கை நடுங்கியது.
"ஏங்க... உங்க போன் தான் அடிக்குது.. யாருனு பாருங்க.. " என்று உள்ளே இருந்து சத்தமிட்டாள் மனைவி.
அழைப்பை எடுக்க மனம் இல்லை. "இல்ல.. யாரோ advertisement.." என்று கட் பண்ணிவிட்டேன்.
மீண்டும் வீடியோ விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது. எனக்கு சங்கோச்சமாகவும் வெட்கமாகவும் இருந்தது. வீடியோவில் அவள் திரும்பி ஆடையை கலட்ட ஆரம்பித்தாள். அதில் அவள் முகம் தெரியவில்லை. என் மகளின் முகமாய் தெரிந்தாள். தர்மசங்கடமாக இருந்தது. போனை அணைத்து, tv வைத்தேன். இந்த முறை தெளிவாக news சேனல்.
அதில் " 11 வயது சிறுமியை 7 மாதமாக பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகள் கைது" என்று செய்தி ஓடியது. கைதானவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேலானவர்கள். என் வயதொத்தவர்கள். எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவர்கள் கையில் விலங்கு இருந்தது. என் கையில் இல்லை. அவ்வளவே வித்தியாசம்.
Biopic
இந்த வாரம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ஓர் படமாக வந்திருக்கிறதாம். சமூக வலைத்தளம் முழுவதும் அவரை பற்றிய பதிவுகள், குறிப்புகள். கூடவே தொலைக்காட்சியிலும் அவரை பற்றிய தொகுப்புகள். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் நான் படித்த வரை அவர் நல்ல கலைஞர். அவர் நல்ல நிலையில் இருக்கும் போது நிறைய பேருக்கு உதவியிருக்கிறார். பின் குடிக்கு அடிமையாகி இறந்திருக்கிறார்.
என் கேள்வி என்னவென்றால்,
அவரின் biopic பார்த்து நான் என்ன புடுங்கபோகிறேன். இல்லை அது என் வாழ்வில் என்ன மயிர மாற்றபோகிறது. Atleast இந்த சமூகத்தில் ஓர் மாற்றம் வந்தாலும் ஏற்று கொள்ளலாம். இப்படி எனக்கு தேவையே இல்லாத கசடுகளை என் மூளைக்குள் ஏற்றி இந்த சமூகத்திற்கு தேவையானவற்றை சிந்திக்க இடமில்லாமல், மூளை நரம்பிவழியும் போது , ஓட்டு கேட்டு என் 5 வருட சமூக அரசியலை என்னிடம் இருந்து பிடிங்கிவிடுகிறார்கள். இந்த படம் கற்பனை கதை உள்ள, 3 மணி நேரம் பார்த்து ரசித்து, சிரித்து கடந்து மறந்து செல்ல சாதாரண படம் அல்ல. ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்கள் வைத்து நமக்கு கொடுக்கபடும் ஓர் document. இது தான் பின் வரும் தலைமுறையின் reference-கள். எனக்கு சாவித்திரி மீதோ, அந்த படத்தை எடுத்த, நடித்த கலைஞர்கள் மீதோ தனிப்பட்ட கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் தமிழகம் இருக்கும் சூழ்நிலையில் இப்போது இந்த படம் தேவையா? எத்தனையோ தலைவர்கள் பற்றி சரியான திரைப்படம் இல்லாத போது சாவித்திரி பற்றி நாம் எதற்கு தெரிந்து கொள்ள வேண்டிம் என்பதே என் கேள்வி.
மேலும் மக்களுக்கு சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது. முக்கியமாக அரசியல் முடிவு எடுப்பதில். 'தேசிய கட்சி தேவையா? , மாநில கட்சியே போதுமா?, திராவிடம் உண்மையில் நன்மை செய்ததா? , வலதா வேண்டுமா? ,
இடதின் தேவை இருக்கிறதா? மய்யம் என்றால் என்ன?' இப்படி எண்ணற்ற கேள்விகளுக்குள் சிக்கி இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு சாவித்திரியின் வாழ்க்கை படமா தேவை. அரசியல் கருத்துக்களை பிரதிபளிக்கும் தலைவர்கள் வாழ்க்கை படம் தானே தேவை.
சினிமா என்னும் கலை இயந்திரம் இந்த தமிழ் சமூகத்தின் வாழ்வியலை மாற்றிய வரலாறு இருந்தும், இதை முன்னேடுக்க எவரும் இல்லை என்பது தான் வருத்தம். கொடுமை என்னவென்றால் அந்த சினிமாவில் இருந்தே 2 பேர் அரசியலில் குதித்துருக்கிறார்கள்.
காலரை தூக்கி கருப்பு சட்டை அணியும் கமல் , ஏன் பெரியாரின் biopic-ல் எடுத்து நடிக்க கூடாது. மய்யத்தில் அமர்ந்து மீசையை முறுக்குவது மட்டும் வீரமல்ல. எதிர்த்து நின்று கருத்துகளை பரப்ப வேண்டும். மக்களுக்கு புரியும்படியாக.
காமராசர் ஆட்சி அமைப்பேன் என தமிழருவி மணியன் முலம் கூறும் ரஜினி, அவரின் biopic-ல் நடிக்க வேண்டாம். At least தயாரிக்கலாமே. ஆனால் எதும் பண்ணாமல் நேரடியாக முதலமைச்சர் நாற்காலி மீது குறி வைப்பது என்ன நியாயம்.
அவர்களை கூட மன்னிக்கலாம். 'திராவிட இயக்கமே வேண்டாம்' என YouTube -ல் கதறும் சிமானின் பேச்சை நம்பும் நிறைய நண்பர்களை நான் கடந்திருக்கிறேன். இன்றைய நிலையில் உண்மையில் திராவிடத்தின் பெயர் சொல்லும் ஒரே கட்சி திமுக. சிமானின் பேச்சை நம்பும் இளைஞர்களுக்கு அறிவூட்டுவது திமுகவின் கடமை அலல்வா. ஆனால் எதும் பண்ணாமல் 'மூன்றாம் கலைஞர்' என flex மட்டும் வைத்த கொள்ள எப்படி மனசு வருகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக அவரே படமேடுத்து நடித்து மக்களின் உயிரை வேறு வாங்குகிறார்கள்.
திடீரென்று ஒரு நாள் சேனல் மாற்றும் போது வசந்த் டிவியில் காமராசர் படம் பார்த்தேன். உண்மை காங்கிரஸ்காரர் பார்த்தால் அழுதுவிடுவார். ஆனால் புரட்சி தமிழன் சத்யராஜ் நடித்த பெரியாரின் படம் அப்படி இல்லை. பார்க்கலாம். இருந்தும் , இது மக்களிடம் எதிர்பார்த்த அளவு சென்றடையவில்லை. காரணம், அந்த படம் documentary mode-ல் மக்களோடு ஒட்டாமல் இருக்கும். மக்களுக்கு documentary பார்க்க பொறுமை இல்லை. ஆம். மக்களுக்கு பொறுமை இல்லை தான். தன் வாழ்க்கைக்கு சம்பாதிக்க வேகமாக ஓடுபவனை, பொறுமையாக அமர்ந்து documentary பார்க்க சொல்வது எவ்வளவு அபத்தம். அவனுக்கு எளிதாக, சுவாரசியமாக சொன்னால் தான் பிடிக்கும். தோனி படம் பார்த்து இருக்கிறிர்களா? அதை போல. எளிய மக்களின் படமாகவும் பாடமாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய வேகமான, பொறுமையற்ற சமூகத்தில் சினிமா அரங்கம் ஒன்றே அரசியல் பாடம் நடத்தப்பட வேண்டிய இடம். புத்தக வடிவில் இருக்கும் பெரியாரின் கொள்கைகளும், பேரறிஞர் அண்ணாவின் மேடை பேச்சுக்களும், ஆதிக்கத்தை எதிர்த்து சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து வளர்ந்து பின் தமிழகத்தையே கைக்குள் அடக்கிய கலைஞரின் வாழ்க்கை வரலாறும் என்றாவது ஓர் நாள் திரையில் மின்னி இளைஞர்களை அறிவூட்ட வேண்டும் என்பதே என் ஆசை.